Tuesday, May 3, 2011

என்னை மயக்கிய கீதங்கள்...

வணக்கம் நண்பர்களே!!!

பல்வேறு தருணங்களில் பல்வேறு பாடல்கள் நம்மை மயக்கும்... இங்கு எனக்கு பிடித்த, என்னை மயக்கிய சில பாடல்கள் தொகுக்கப்பட இருக்கிறது.... திரை இசை பாடல்கள், தனிப்பாடல்கள், பக்திபாடல்கள், கர்நாடக இசை பாடல்கள் என கலவையான ரசனையாக இருக்கும் எனது...

சுதர்சனம், கே வி மகாதேவன், மெல்லிசை மன்னர்கள், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், என ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரும் என்னை மயக்கிய இசைவாணர்கள் திரையில்... 

டி எம் எஸ் முதல் கார்த்தி வரை, சுசீலா முதல் சைந்தவி வரை என பல்வேறு பின்னணி குரல்களும் என்னை மயக்கியது... 

அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன் என சில குறிப்பிட்ட கர்நாடக இசைகுயில்களும் என்னை மயக்கியது உண்டு... 

சில உதாரணங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு.... 

கர்ணன் படத்தில் மெல்லிசை மன்னர்கள், ஹிந்துஸ்தானி இசையை புது விதமாய் பயன்படுத்தி அணைத்து பாடல்களையும் ரசிக்க வைத்திருப்பர்... அதிலும் குறிப்பாக "உள்ளத்தில் நல்ல உள்ளம்... " சீர்காழியாரின் குரலில் நடிகர் திலகத்தின் நடிப்பில், கண்ணனை வரும் என் டி ஆர் அவர்களின் தேஜஸ் மிகுந்த முகபாவத்திலும் மிக அருமையாக வந்திருக்கும்... குறிப்பாக "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... வஞ்சகன் கண்ணனடா... " மனிதர்கள் நன்றி மறக்க கூடாது என்பதை எவ்வளவு கருத்தாழமிக்க வரிகளில் கொடுத்திருக்கிறார் கவிஞர்... 

பாரதியின் "எங்கிருந்தோ வந்தான்... " கண்ணன் பாட்டு... கே வீ  மகாதேவன் இசை... படிக்காத மேதை படத்தில்... இப்பொழுதும் இரவுகளில் கேட்டால் கண்ணீர் வரவழைக்கும் பாடல்... பாரதியின் வரிகளுக்கு அப்படி ஒரு நல்லிசை கோர்த்திருப்பார் கே வீ... " நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்... பார்வையிலே சேவகனாய் கண்ணன்... எங்கிருந்தோ வந்தான் இடைஜாதி நான் என்றான்.... இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்... கண்ணன்.... எங்கிருந்தோ.... " என வரும் வரிகளை இப்போது கேட்டாலும் என் கண்ணில் நீர் வரும்.... 

.... தொடரும்....

என் பயணங்கள்.... தொடர்கிறது

இது எனது பணி நிமித்தமான பயண அனுபவம்... சென்ற வருடம் ஜூன் மாதம், திருவனந்தபுரத்திற்கு ஒரு அலுவல் நிமித்தம் பயணம் மேற்கொண்டேன்... தவறான பயணசீட்டு முன்பதிவினால் என் பயணத்தை கோழிக்கோடு வழியாக மேற்கொண்டேன்... அங்குள்ள என் சக ஊழியர் மூலம் கோழிக்கோடு - திருவனந்தபுரம் பயண திட்டம், குருவாயூர் வழியாக  என தயாரானது. கோழிக்கோட்டிலிருந்து குட்டிபுரம் எனும் ஊருக்கு ரயிலில் பயணம்... அடுத்து அங்கிருந்து குருவாயூருக்கு பேருந்து பயணம்... குளியல் முடித்து என் பாலகிருஷ்ணனை காண ஆவலோடு சென்றோம்... கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர காத்திருப்புக்கு பின் என் இனிய பாலகிருஷ்ணனின் தரிசனம்.... காத்திருந்த களைப்பெல்லாம் நொடியில் மறைந்தது.... பின்னர் திருச்சூர் வந்து அங்கிருந்து திருவனத்தபுரம் பயணம் புறப்பட்டோம்....

ரயில், பேருந்து என இரு வேறு வகை பயணப்பட்டாலும் என் பிரிய கிருஷ்ணனை  பார்த்து மகிழ்ந்த அந்த சில நிமிடங்கள் என்னால் மறக்க முடியாதது....