Tuesday, May 3, 2011

என்னை மயக்கிய கீதங்கள்...

வணக்கம் நண்பர்களே!!!

பல்வேறு தருணங்களில் பல்வேறு பாடல்கள் நம்மை மயக்கும்... இங்கு எனக்கு பிடித்த, என்னை மயக்கிய சில பாடல்கள் தொகுக்கப்பட இருக்கிறது.... திரை இசை பாடல்கள், தனிப்பாடல்கள், பக்திபாடல்கள், கர்நாடக இசை பாடல்கள் என கலவையான ரசனையாக இருக்கும் எனது...

சுதர்சனம், கே வி மகாதேவன், மெல்லிசை மன்னர்கள், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், என ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரும் என்னை மயக்கிய இசைவாணர்கள் திரையில்... 

டி எம் எஸ் முதல் கார்த்தி வரை, சுசீலா முதல் சைந்தவி வரை என பல்வேறு பின்னணி குரல்களும் என்னை மயக்கியது... 

அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன் என சில குறிப்பிட்ட கர்நாடக இசைகுயில்களும் என்னை மயக்கியது உண்டு... 

சில உதாரணங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு.... 

கர்ணன் படத்தில் மெல்லிசை மன்னர்கள், ஹிந்துஸ்தானி இசையை புது விதமாய் பயன்படுத்தி அணைத்து பாடல்களையும் ரசிக்க வைத்திருப்பர்... அதிலும் குறிப்பாக "உள்ளத்தில் நல்ல உள்ளம்... " சீர்காழியாரின் குரலில் நடிகர் திலகத்தின் நடிப்பில், கண்ணனை வரும் என் டி ஆர் அவர்களின் தேஜஸ் மிகுந்த முகபாவத்திலும் மிக அருமையாக வந்திருக்கும்... குறிப்பாக "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... வஞ்சகன் கண்ணனடா... " மனிதர்கள் நன்றி மறக்க கூடாது என்பதை எவ்வளவு கருத்தாழமிக்க வரிகளில் கொடுத்திருக்கிறார் கவிஞர்... 

பாரதியின் "எங்கிருந்தோ வந்தான்... " கண்ணன் பாட்டு... கே வீ  மகாதேவன் இசை... படிக்காத மேதை படத்தில்... இப்பொழுதும் இரவுகளில் கேட்டால் கண்ணீர் வரவழைக்கும் பாடல்... பாரதியின் வரிகளுக்கு அப்படி ஒரு நல்லிசை கோர்த்திருப்பார் கே வீ... " நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்... பார்வையிலே சேவகனாய் கண்ணன்... எங்கிருந்தோ வந்தான் இடைஜாதி நான் என்றான்.... இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்... கண்ணன்.... எங்கிருந்தோ.... " என வரும் வரிகளை இப்போது கேட்டாலும் என் கண்ணில் நீர் வரும்.... 

.... தொடரும்....

No comments:

Post a Comment