இது எனது பணி நிமித்தமான பயண அனுபவம்... சென்ற வருடம் ஜூன் மாதம், திருவனந்தபுரத்திற்கு ஒரு அலுவல் நிமித்தம் பயணம் மேற்கொண்டேன்... தவறான பயணசீட்டு முன்பதிவினால் என் பயணத்தை கோழிக்கோடு வழியாக மேற்கொண்டேன்... அங்குள்ள என் சக ஊழியர் மூலம் கோழிக்கோடு - திருவனந்தபுரம் பயண திட்டம், குருவாயூர் வழியாக என தயாரானது. கோழிக்கோட்டிலிருந்து குட்டிபுரம் எனும் ஊருக்கு ரயிலில் பயணம்... அடுத்து அங்கிருந்து குருவாயூருக்கு பேருந்து பயணம்... குளியல் முடித்து என் பாலகிருஷ்ணனை காண ஆவலோடு சென்றோம்... கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர காத்திருப்புக்கு பின் என் இனிய பாலகிருஷ்ணனின் தரிசனம்.... காத்திருந்த களைப்பெல்லாம் நொடியில் மறைந்தது.... பின்னர் திருச்சூர் வந்து அங்கிருந்து திருவனத்தபுரம் பயணம் புறப்பட்டோம்....
ரயில், பேருந்து என இரு வேறு வகை பயணப்பட்டாலும் என் பிரிய கிருஷ்ணனை பார்த்து மகிழ்ந்த அந்த சில நிமிடங்கள் என்னால் மறக்க முடியாதது....
No comments:
Post a Comment