இந்த பகுதியில் எனது மறக்க முடியாத சில பயணங்களை பற்றி எழுத விழைகிறேன்... அது 2007 தீபாவளி.... அப்போது சென்னையில் பணி... திட்டமிடாத பயணமாக சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு கிளம்பினேன்.... தீபாவளி நேரம் என்பதால் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன.... கூட்டம் அலைமோதுகிறது கோயம்பேடு பேருந்து நிலையத்தில்... திருச்சி, மதுரை என பிரித்து பயணிக்கலாம் என முடிவெடுத்து திருச்சி பேருந்துக்கு காத்திருந்தேன்... என்னைபோல காத்திருந்த ஒரு நண்பர், என்னிடம் பேச தொடங்கினார்... பேருந்து வந்தது.. நண்பர் அமர இடம் கிடைத்தது.... எனக்கு நிற்க மட்டுமே இடம் கிடைத்தது.... பின்னர் நண்பர் அவருடைய நண்பர்களுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.... நானோ ஆனந்த விகடனில் ஐக்கியம் ஆனேன்... பின்னர் பேருந்து ஓரிடத்தில் நிற்க, தேனீர் பருக இறங்கினோம்... பின்னர் பேருந்தில் அந்த நண்பர் என்னிடம் பேச தொடங்கினார்... சுமார் மூன்று மணி நேரம் பேசினோம்.... பல நாள் பார்த்து பழகியவர்போல ஒரு உணர்வு.... காலையில் திருச்சியில் அவர் இறங்கும்போது அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டோம்.... அவருக்கு சிவனை தவிர, சைவத்தை தவிர வேறு சமயங்களில் ஈர்ப்பு இல்லை.... எனக்கு சைவம் வைணவம் என எல்லா சமய ஈடுபாடு உண்டு .... குழலிசை மன்னன் கண்ணனின் தீவிர ரசிகன், பக்தன், காதலன் என்றே சொல்லலாம்... அவ்வளவு ஈர்ப்பு கண்ணன்பால்.... நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனோம்.... ஒருமுறை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை தரிசிக்க ,சென்றிருந்தேன்.... நண்பரும் அங்கேயே தங்கி இருக்க, நாங்கள் சந்திக்க முடிவு செய்தோம்.... கோயில் உள்ளே நான் தரிசனம் முடித்துவர சுமார் ஒரு மணி நேரம் ஆனது... நண்பரோ, கோயில் வாசலிலேயே எனக்காக காத்திருந்தார்.... பின்னர் சந்தித்தோம்... இப்படியாக எங்கள் நட்பு இன்று வரை தொடர்கிறது....
பயணத்தை விவரிக்கும் சுவாரஸ்யத்தில் நண்பர் பெயர் சொல்ல மறந்துவிட்டேன்... அவர் பெயர் கார்த்திக் குமார்... வேதியியல் சம்பந்தப்பட்ட துறையில் பணியில் இருக்கிறார்.... திருச்சியில் வாசம்....
No comments:
Post a Comment