Tuesday, January 18, 2011

ஜெசிக்காவை யாரும் கொலை செய்யவில்லை... (No One Killed Jessica)

கடந்த ஞாயிறு ஹைதராபாத் ஐநாக்ஸ் திரையரங்கில் நோ ஒன் கில்ட் ஜெசிக்கா (Noone Killed Jessica) எனும் ஹிந்தி திரைப்படம் பார்த்தேன்... ராணிமுகர்ஜி, வித்யாபாலன் என சில அறிந்த முகங்கள்... திரைக்கதை ஓட்டத்தில் இவ்விருவரின் பங்கே அதிகம்.... சமீபத்தில் கூட பரப்பாக பேசப்பட்ட ஜெசிக்கா கொலைவழக்கினை மையமாக கொண்டு திரைக்கதை பின்னப்பட்டிருந்தது.... சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தியும் , சாட்சிகளை விலை கொடுத்து வாங்கியும் ஒரு கொலையை ஆதாரமற்றதாக அரசியலில் இருக்கும் ஒரு பெரிய புள்ளி மாற்றிவிடுகிறார்.... அது வரை இந்த கொலைவழக்கினை பற்றி பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் செய்தி தொலைக்காட்சி நிருபரான ராணிமுகர்ஜி களத்தில் குதிக்கிறார்.... பின்னர் இந்த வழக்கு எந்த நிலைக்கு செல்கிறது என்பது இரண்டாம்பாதி.... கதையோட்டத்தில் முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், பாரத பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரிடம் (அனைவரும் பிற திரைக்கலைஞர்கள் அல்லது பழைய கோப்புகளின் கணினி விளையாட்டு) இவ்வழக்கு பற்றி பேட்டி காண்பது போல் அதுவும் அவர்கள் முகம் காட்டாது அவர்களின் பின்புறமாய் காட்டுவதும் அருமை... ஜெசிக்காவின் அக்கா சப்ரீனா எனும் கதாபாத்திரத்தில் தன்னை முழுவதும் பொருத்தி பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் வித்யாபாலன்....

படத்தின் முடிவில், படம் பார்த்த ஒரு நபர், அவர் நண்பரிடம் சொல்கிறார்.... நண்பா, மிக்க நன்றி.... பலநாட்களுக்கு பின்னர் ஒரு மிக அருமையான படம் பார்க்க என்னை அழைத்து வந்தாய்.... நன்றி....

படம் பார்த்த பெரும்பாலோரின் கருத்துக்களும் மேற்சொன்ன கருத்தொற்றியே இருந்தது.... முடிந்தால், நண்பர்களே நீங்களும் ஒருமுறை இப்படத்தை பாருங்கள்...

நன்றி...
உங்கள் அன்பின்
ஆனந்த கிருஷ்ணன் ஞா

1 comment:

  1. ethu pondra nikalvugal anivar valivilam ullatha nanri solgiren avargalukku

    ReplyDelete