பாரதி..... எட்டயபுரத்து முண்டாசு கவிஞன்.... அவன் இருந்த காலத்திய மூடப்பழக்கங்களை நெஞ்சுரத்தோடு எதிர்த்தவன்.... சமதர்மம் வேண்டியவன்.... சுதந்திர வேட்கை தூண்டியவன்....
ஆனால் இங்கே முன்டாசுகவியின் பெயர் கொண்ட இன்றிருக்கும், என்னை கவர்ந்த சிலரைப்பற்றி எழுத விழைகிறேன்.....
பாலபாரதி - திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் - சிகப்பு சட்டை தோழர்களின் பிரதிநிதி.... தன் தொகுதி மட்டுமல்லாது பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்.... நாவன்மை மிக்க நல்ல பெண்மணி....
பாரதி பாஸ்கர் - தனியார் வங்கி பணி.... சன் டிவி பட்டிமன்றங்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் அறிமுகம்.... சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் என்றாலும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள நல்ல பேச்சாளர்.... பழகுதமிழில் பாமரருக்கும் புரியும் வண்ணம் கருத்துரைக்கும் திறன்மிக்கவர்.... தற்போது சன் டிவியில் வாங்க பேசலாம் என அன்றாட நிகழ்வுகளை திரு. ராஜா அவர்களுடன் அலசுகிறார்.....
இன்னும் வளரும்....
Bharathi thodaratum.........
ReplyDelete